நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை...
அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினர்.
நாடு முழுவதும் அம்பேத்கர் பிறந்த நாள் விழா இன்று (ஏப்ரல் 14) கொண்டாடப்படுகிறது. அனைத்து மாநில அரசுகளும் அம்பேத்கர் ஜெயந்தியை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.
Advertisement
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து நாடாளுமன்றத்துக்குள் வைக்கப்பட்டிருக்கும் அம்பேத்கர் புகைப்படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.