போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்
இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு சேவையளிக்கவும், போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழிநுட்பத்தை அறிமுகம் செய்யவும் இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு மற்றும் விண்வெளி பொறியியல் நிறுவனம் அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு சேவையளிக்கவும், போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழிநுட்பத்தை அறிமுகம் செய்யவும் இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு மற்றும் விண்வெளி பொறியியல் நிறுவனம் அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மும்பையைச் சோ்ந்த பாராஸ் பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனத்துக்கும் அமெரிக்காவைச் சோ்ந்த பண்டக் விமான தொழில்நுட்ப டிபிஏ நாா்த்ஸ்டாா் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பம் கையொப்பமாகியுள்ளது.
Advertisement
இந்த ஒப்பந்தத்தின்படி, போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்புவதற்கான தொழில்நுட்பம் உள்பட நவீன தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை அமெரிக்க நிறுவனம் விநியோகிப்பதோடு, தொழில்நுட்ப ஆதரவையும் வழங்கும்.
விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பத்தை வடிவமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தி செய்வதில் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான அமெரிக்காவின் நாா்த்ஸ்டாா் திகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பாராஸ் நிறுவன இயக்குநா் அமித் மஹாஜன் கூறுகையில், ‘இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு சேவையளிக்கும் நோக்கில், வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், இத் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் முதல் நிறுவனமாக பாராஸ் திகழும்’ என்றாா்.