முகப்பு
இந்தியா

தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலைகள் அதிர்ச்சி தருமா? அதுவும் ரூ.18, ரூ.35 வரை!!

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலைகள் முறையே ரூ.18, ரூ.35 வரை உயரக்கூடும் என்பது பற்றி..

Updated On : 16 ஏப்ரல், 2026 at 12:16 PM
அதிர்ச்சி தருமா பெட்ரோல், டீசல் விலைகள் - file photo
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 12:12 PM

ஈரான் போர் காரணமாக, பெட்ரோல், டீசல் நிறுவனங்களுக்கு வரத்துக் குறைந்து கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை அடைந்து வருவதால் ஐந்து மாநில தேர்தல்கள் முடிந்ததும் உடனடியாக எரிபொருள் விலை உயர்வை மக்கள் சந்திக்கும் நிலை அபாயம் இருப்பதாக ஆரூடங்கள் கூறுகின்றன.

அதுவும் ஏதோ ஓரிரண்டு ரூபாய்கள் அல்ல என்றும் பெட்ரோல் விலை ரூ.18 வரையிலும், டீசல் விலை ரூ.35 வரையிலும் உயர்த்தப்படலாம் என்றும், தற்போது ஒரு லிட்டருக்கு இந்த அளவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை எதிர்கொள்வதால், அதனை ஈடுபட்டும் வகையில் விலை உயர்வுகள் குறித்த அறிவிப்புகள் வரலாம் என கூறப்படுகிறது.

வாக்களித்த மக்களுக்கு நிச்சயம் மத்திய அரசு ஒரு பரிசு கொடுக்கும், அந்த பரிசு பெட்ரோல், டீசல் விலை உயர்வாக இருக்கலாம் என்றே கருதப்படுகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.