முகப்பு
இந்தியா

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி!

சரத் பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பற்றி..

Updated On : 21 ஏப்ரல், 2026 at 3:12 PM
சரத் பவார் - file photo
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 2:57 PM

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மருத்துவப் பரிசோதனைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

85 வயதான மாநிலங்களவை உறுப்பினரான சரத் பவாருக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மும்பையில் உள்ள பீட்ச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

சரத் பவார் வழக்கமான மருத்துவப் பரிசோதனை, தொடர் மருத்துவக் கண்காணிப்புக்காகவே மருத்துவமனையில் உள்ளார். அவரது உடல்நிலையில் கவலைப்படத்தக்க வகையில் எந்தவித பாதிப்பும் இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

சமீபத்தில், சரத்பவார் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார். அப்போது, அவர் தில்லியில் செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக, பிப்ரவரியில் மார்புத் தொற்று மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக இவர் புணேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டு முறை அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

NCP (SP) president and Rajya Sabha member Sharad Pawar has been admitted to a private hospital in Mumbai for a health check-up, sources said on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.