முகப்பு
இந்தியா

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கிறோம்! ஒமர் அப்துல்லா

பஹல்காம் தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு நாளில் ஒமர் அப்துல்லா பதிவு...

Updated On : 22 ஏப்ரல் 2026, 11:00 am IST
ஒமர் அப்துல்லா - ANI
பகிர்:

ஓராண்டு கடந்தும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு ஏப். 22 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத்தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் முன்னிலையிலேயே கொல்லப்பட்டது நாட்டையே உலுக்கியது.

இந்த தாக்குதலில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“ஓராண்டு கடந்தும் பயங்கரவாதத்துக்கும், வன்முறைக்கும் எதிராக நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். ஜம்மு - காஷ்மீரைத் துயரங்களில் இருந்தும், அப்பாவி மக்கள் உயிரிழப்பதைத் தடுப்பதிலும் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய எங்களால் இயன்ற அனைத்தும் செய்து வருகிறோம்.

கடந்தாண்டு நடைபெற்ற கோழைத்தனமான தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன் ஒற்றுமயுடன் துணை நிற்கிறோம். பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களின் ஆன்மாக்கள் அமைதியில் இளைப்பாறட்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

summary

We stand united against terrorism! — Omar Abdullah

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.