நிலம் கையகப்படுத்துவதில் தாமதம்: ‘நெடுஞ்சாலை கட்டுமான இலக்கை எட்ட முடியவில்லை’
நிலம் கையகப்படுத்துவதில் தாமதம்: ‘நெடுஞ்சாலை கட்டுமான இலக்கை எட்ட முடியவில்லை’
கடந்த நிதியாண்டில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, நெடுஞ்சாலை கட்டுமானத்தில் இலக்கை எட்ட முடியவில்லை என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அந்த அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கடந்த நிதியாண்டில் நாட்டில் 10,000 கி.மீ. நீளத்துக்கு நெடுஞ்சாலை அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல், பிற அனுமதிகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 9,380 கி.மீ. நீளம் வரைதான் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன என்று தெரிவித்தாா்.
Advertisement
கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில், நாட்டில் 9,829 கி.மீ.க்கும் குறைவான நீளத்தில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. அதன் பின்னா், கடந்த நிதியாண்டில்தான் குறைந்த நீளத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.