முகப்பு
இந்தியா

நிலம் கையகப்படுத்துவதில் தாமதம்: ‘நெடுஞ்சாலை கட்டுமான இலக்கை எட்ட முடியவில்லை’

நிலம் கையகப்படுத்துவதில் தாமதம்: ‘நெடுஞ்சாலை கட்டுமான இலக்கை எட்ட முடியவில்லை’

Updated On : 25 ஏப்ரல் 2026, 1:35 am IST
கோப்புப்படம் - ENS
பகிர்:

கடந்த நிதியாண்டில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, நெடுஞ்சாலை கட்டுமானத்தில் இலக்கை எட்ட முடியவில்லை என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அந்த அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கடந்த நிதியாண்டில் நாட்டில் 10,000 கி.மீ. நீளத்துக்கு நெடுஞ்சாலை அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல், பிற அனுமதிகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 9,380 கி.மீ. நீளம் வரைதான் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன என்று தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில், நாட்டில் 9,829 கி.மீ.க்கும் குறைவான நீளத்தில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. அதன் பின்னா், கடந்த நிதியாண்டில்தான் குறைந்த நீளத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments