ஐ.நா. அவைத் தலைவர் அனலேனா இந்தியா வருகை!
ஐக்கிய நாடுகள் அவைத் தலைவர் அனலேனா, இந்தியாவுக்கு அடுத்த வாரம் வருகை தரவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அவைத் தலைவர் அனலேனா பேர்பாக் இந்தியாவுக்கு அடுத்த வாரம் வருகை தரவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அவையின் 80-ஆவது தலைவரான அனலேனா பேர்பாக், இந்தியாவுக்கு அதிகாரபூர்வமாக வருகைதரவிருப்பதாகவும், தில்லியில் அரசு அதிகாரிகளுடன் சந்திப்பு மேற்கொள்ளவிருப்பதாகவும் போர்பாக்கின் செய்தித் தொடர்பாளர் காலின்ஸ் தெரிவித்தார். தொடர்ந்து, சீனாவுக்கும் அவர் பயணம் மேற்கொள்கிறார்.
ஐ.நா. அவையின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவுக்கு முதன்முறையாக அனலேனா வருகை தருகிறார். முன்னதாக, ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சராக போர்பாக் இருந்தபோதும், இந்தியாவுக்கு வருகை தந்திருக்கிறார்.
Advertisement
கடந்த பிப்ரவரியில் தில்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் ஐ.நா. பொதுச் செயலாளர் குட்டரெஸ் பங்கேற்றிருந்தார்.