முகப்பு
உலகம்

ஐ.நா. அவையின் புதிய தலைவராகிறார் வங்கதேச வெளியுறவு அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் பொது அவையின் புதிய தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் தேர்வு...

Updated On : 2 ஜூன் 2026, 9:43 pm IST
ஐ.நா. அவையின் புதிய தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான் தேர்வு... - எக்ஸ்/UN
பகிர்:

ஐக்கிய நாடுகள் அவையின் புதிய தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் 81 ஆவது அவையின் தலைவருக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) நடைபெற்றது.

இந்தத் தேர்தலில், தலைவர் பதவிக்கு வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான் மற்றும் சிப்ரஸ் நாட்டின் சிறப்பு பிரதிநிதி ஆண்ட்ரியாஸ் கக்கூரிஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.

Advertisement

Advertisement

193 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இடம்பெற்ற அவைக்குத் தலைமை வகிப்பதற்காக நடைபெற்ற இந்தத் தேர்தலில் 190 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில், பெரும்பான்மைக்கு 96 வாக்குகள் பெற வேண்டியது கட்டாயமாகும்.

இந்தத் தேர்தலில், ஆண்ட்ரியாஸ் கக்கூரிஸ் 91 வாக்குகள் பெற்ற நிலையில், வங்கதேசத்தின் கலீலுர் ரஹ்மான் 99 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார். இதன்மூலம், வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும் ஐ.நா.வின் 81 ஆவது அவைக்கு கலீலுர் ரஹ்மான் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே, கடந்த 1986 ஆம் ஆண்டு ஐ.நா.வின் 41 ஆவது அவைக்கு வங்கதேசத்தின் ஹுமாயூன் ரஷீத் சௌத்ரி தலைவராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

summary

Bangladesh's Foreign Minister, Khalilur Rahman, has been elected as the new head of the United Nations.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.