கூடங்குளம் அணு உலையில் பழுது: 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
கூடங்குளம் முதலாவது அணு உலையில் ஏற்பட்டுள்ள பழுது குறித்து...
கூடங்குளம் முதலாவது அணு உலையில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக, தமிழ்நாட்டுக்கான 562 மெகாவாட் கிடைப்பதில் தற்காலிக சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி கூடங்குளத்தில் அமைந்துள்ள அணு மின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு, மின் உற்பத்தி நடை பெற்று வருகிறது.
இந்த நிலையில், கூடங்குளம் முதலாவது அணு உலையில் ஜெனரேட்டர் பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால், தமிழ்நாட்டுக்கான 562 மெகாவாட் மின் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனையடுத்து, முதலாவது அணு உலையில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Power generation halted due to fault at Kudankulam Unit 1
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.