முகப்பு
இந்தியா

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??

கரூர் எம்எல்ஏவான செந்தில் பாலாஜி சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்கவில்லை என்று தகவல்.

Updated On : 24 ஏப்ரல் 2026, 1:29 pm IST
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. - கோப்புப் படம்
பகிர்:

கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கியிருக்கும் முன்னாள் அமைச்சரும் கரூர் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி நேற்று சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டிக்கு வந்து தனது பெயர் இருக்கும் வாக்குச்சாவடியில் வாக்களிப்பார் என்று அவரது தொண்டர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தார்கள்.

கடந்த தேர்தலில் கரூரில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, என்ன காரணத்தினாலோ இந்த முறை கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தல் பிரசாரத்துக்காக அவ்வப்போது கோவை சென்று பிரசாரம் செய்து வந்தார்.

Advertisement

Advertisement

தேர்தல் பிரசாரங்கள் நிறைவு பெற்ற நிலையிலும், அவர் கரூர் திரும்பவில்லை. கோவையிலேயே நேற்று முழுக்க அவர் இருந்துள்ளார். கரூர் வந்து வாக்களிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் நினைத்திருந்த நிலையில், அவர் கோவையிலேயே இருந்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

எம்எல்ஏ ஒருவர் தன்னுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் இருக்கலாமா என்று இது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், கரூரில் திமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது, கோவை தெற்கு தொகுதியில் திமுகவின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்பதால்தான் செந்தில் பாலாஜி, வாக்குப்பதிவு முழுக்க வாக்குச்சாவடிக்குச் சென்று நிலைமையை நேரில் பார்வையிட்டு வந்தார். அதனால்தான் அவர் கரூர் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

summary

It is reported that Karur MLA Senthil Balaji did not go to his hometown and vote.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.