முகப்பு
இந்தியா

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட வாக்குப் பதிவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி சாலை வலம் மேற்கொண்டது குறித்து...

Updated On : 26 ஏப்ரல், 2026 at 8:39 PM
பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி சாலைவலம். - ஏஎன்ஐ
பகிர்:

கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 26) சாலை வலம் மேற்கொண்டார். சாலையின் இருபுறமும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் திரண்டு நின்று பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான முதல் கட்டத் தேர்தல் ஏப். 23 ஆம் தேதி முடிந்த நிலையில், ஏப். 29 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. பிரசாரத்திற்கு நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திற்குட்பட்ட பாங்காவோன் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து கொல்கத்தா மக்களிடையே வாக்கு சேகரிப்பதற்காக சாலைவலம் மேற்கொண்டார். பாஜக தொண்டர்கள், மக்கள் பலர் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மோடியின் வருகையையொட்டி கொல்கத்தாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

summary

Prime Minister Narendra Modi holds a roadshow in North Kolkata

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.