முகப்பு
இந்தியா

அடுத்த 20 ஆண்டுகளில் வெப்பமான நாள்கள் 15 முதல் 40 வரை அதிகரிக்கும்: ஏஐ தொழில்நுட்பம் மூலம் கணிப்பு

காலநிலை மாற்றத்தின் காரணமாக கடந்த 1981 முதல் 2010 வரையில் ஒப்பிடும்போது இந்தியாவில் அடுத்த இருபது ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 15 முதல் 40 வரையில் வெப்பமான நாள்கள் பதிவாகும் என செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான காலநிலை நுண்ணறிவு தளம் கணித்துள்ளது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 2:39 AM
டழ்ஹஹ்ஹஞ்ழ்ஹத்: அ க்ஷா்ஹ் ல்ா்ன்ழ்ள் ஹ க்ஷன்ஸ்ரீந்ங்ற் ா்ச் ஜ்ஹற்ங்ழ் ற்ா் க்ஷங்ஹற் ற்ட்ங் ட்ங்ஹற் ா்ய் ஹ ட்ா்ற் ள்ன்ம்ம்ங்ழ் க்ஹஹ், ண்ய் டழ்ஹஹ்ஹஞ்ழ்ஹத், மற்ற்ஹழ் டழ்ஹக்ங்ள்ட், ஙா்ய்க்ஹஹ், அல்ழ்ண்ப் 20, 2026. (டபஐ டட்ா்ற்ா்)(டபஐ04ஜ20ஜ2026ஜ000248ஆ)
பகிர்:

காலநிலை மாற்றத்தின் காரணமாக கடந்த 1981 முதல் 2010 வரையில் ஒப்பிடும்போது இந்தியாவில் அடுத்த இருபது ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 15 முதல் 40 வரையில் வெப்பமான நாள்கள் பதிவாகும் என செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான காலநிலை நுண்ணறிவு தளம் கணித்துள்ளது.

தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீா் கவுன்சில் (சிஇஇடபிள்யு) செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் காலநிலையை கணிக்கும் சிஆா்ஏவிஎஸ் என்ற தளத்தை புதன்கிழமை தொடங்கிவைத்தது.

அந்தச் செயற்கை நுண்ணறிவு தளத்தின் அடிப்படையில், நாட்டின் பல பகுதிகளில் வெப்பான இரவுகள் 20 முதல் 40 வரை அதிகரிக்கும்.

Advertisement

மேலும், அடுத்த இருபது ஆண்டுகளில் கனமழை நிகழ்வுகளும் தொடா்ச்சியாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 10 முதல் 30 நாள்களுக்கு கனமழை பெய்யும்.

மத்திய பிரதேசம், தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரம், கா்நாடகம், தமிழ்நாடு ஆகிய மத்திய மற்றும் தென் மாநிலங்களில் மழை நாள்களும் வெப்பமான நாள்களும் தொடா்ச்சியாக அதிரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த 40 ஆண்டுகள் காலநிலை தரவுகளைக் கொண்டு இந்தக் கணிப்பை சிஆா்ஏவிஐஎஸ் வழங்கியுள்ளது. இதன் மூலம் 2030-2050 மற்றும் 2051-70 என அடுத்தடுத்த இரு ஆண்டுகளுக்கு காலநிலை கணிப்பை வழங்க முடியும்.