முகப்பு
இந்தியா

மல்லிகார்ஜுன கார்கே முதல்வரானால் வரவேற்போம்: கர்நாடக அமைச்சர் ஜி.பரமேஸ்வர்

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மாநில முதல்வரானால் வரவேற்போம் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.

Updated On : 30 ஏப்ரல் 2026, 3:44 am IST
பகிர்:

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மாநில முதல்வரானால் வரவேற்போம் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.

இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது:

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக மாநில முதல்வரானால் மகிழ்ச்சியுடன் வரவேற்போம். மல்லிகார்ஜுன கார்கே, அனுபவம் மிக்க மூத்த தலைவர்.

Advertisement

Advertisement

கர்நாடக முதல்வர் மாற்றம் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அதைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. குறிப்பாக எனக்கு எதுவும் தெரியவில்லை. எனவே, முதல்வர் மாற்றம் தொடர்பாக கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது.

கர்நாடகத்தின் அரசியல் நிலைமை குறித்து கட்சி மேலிடத்துக்கு நன்றாகத் தெரியும். எனவே, முதல்வர் மாற்றம் குறித்து என்ன முடிவெடுக்க வேண்டும் என்பது பற்றி கட்சி மேலிடத்துக்கு தெரியும்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு நீண்டநெடிய அரசியல் அனுபவம் உள்ளது.

கர்நாடக அரசியல் பற்றிய அனுபவம் அவருக்கு இருப்பதால், இங்கு என்ன நடக்கிறது என்பது பற்றி அவருக்கு நன்றாக தெரியும். அவருக்கு எதையும் சொல்ல வேண்டிய அவசிய

மில்லை.

எனவே, இதுபற்றி மேலும் எதையும் பேச நான் விரும்பவில்லை. இவற்றைவிட, மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவது மிகவும் முக்கியம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments