மாநிலங்களவைத் தேர்தல்! ராகுல், டி.கே. சிவகுமார் முன்னிலையில் கார்கே வேட்புமனு தாக்கல்!
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேட்புமனு தாக்கல்...
கர்நாடகத்தில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் வரும் ஜூன் 18 ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில், மாநிலங்கள் வாரியாக காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 4) இரவு வெளியானது.
இதையடுத்து, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பதவிக்காலம் நிகழாண்டில் (2026) முடிவடைந்தைத் தொடர்ந்து, அவர் மீண்டும் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் களமிறக்கப்படுகிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்ய, கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூன் 5) கர்நாடகத் தலைநகர் பெங்களூருவுக்குச் சென்றடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, ராகுல் காந்தி, கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.கே. ஹரிபிரசாத் ஆகியோர் முன்னிலையில் மல்லிகார்ஜுன கார்கே தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மல்லிகார்ஜுன கார்கே, கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் முதல்முறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.