பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே
பெங்களூரு மருத்துவமனை அருகே காய்கறி விற்பவர்கள் பலியான சம்பவம் குறித்து...
பெங்களூரில் பௌரிங் மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் மருத்துவமனை வளாகத்தின் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து கார்கே பேசியதாவது, "அது ஒரு பழைய வளாகம். அதுமட்டுமின்றி, அந்த வளாகத்தின் சுவர் சரியாகக் கட்டப்படவில்லை.
சில இடங்களில் மண் சுவரும், சில இடங்களில் செங்கற்களாலான சுவர் இருப்பதையும் கண்டேன். அந்த வளாகத்தைச் சரிசெய்ய வேண்டும் என நான் அங்கு பேசியிருக்கிறேன்.
Advertisement
Advertisement
வளாகத்துக்கு அருகில் அமர்ந்து காய்கறி விற்றவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
வரும் காலங்களில் காய்கறி விற்பவர்கள், வளாகத்தைத் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது. இன்று என்ன நடந்தது என்று பார்த்தீர்களா? இன்று பெங்களூரில் நடந்தது, நாளை வேறு எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.
ஆகையால், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, சிறு வணிகர்களுக்கு முடிந்தவரையில் உதவ வேண்டும்" என்று தெரிவித்தார்.
பெங்களூரில் புதன்கிழமைய்ல் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. ஓரிரு மணிநேரம் மட்டுமே நீடித்த பலத்த காற்று மற்றும் கனமழையால் பெங்களூரின் சாலைகள் சேறும் சகதியுமாக மாறின.
இந்த நிலையில், கனமழையின்போது சிவாஜிநகரில் பௌரிங் மருத்துவமனையின் 8 அடி உயர சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில், சுவரை ஒட்டிய நடைபாதையில் இருந்த வியாபாரிகள் உள்பட மக்கள் மீது சுவர் விழுந்தது. இந்த விபத்தில் 10 பேர் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மாநில முதல்வர் சித்தராமையா ரூ. 5 லட்சமும், பிரதமர் மோடி ரூ. 2 லட்சமும் நிவாரண உதவி அறிவித்தனர்.
Bowring Hospital Wall Collapse in Bengaluru: The government should take precaution and help these gig workers or small traders, says Congress President Mallikarjun Kharge
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.