முகப்பு
இந்தியா

மத்திய பட்ஜெட் : கவனம் ஈர்க்கும் நிர்மலா சீதாராமனின் ஓவியம்!

பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதையொட்டி, கவனம் ஈர்க்கும் நிர்மலா சீதாராமன் ஓவியம் குறித்து...

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 5:08 AM
நிர்மலா சீதாராமனின் ஓவியம்
பகிர்:

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஓவியத்தை வரைந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

சிவப்பு துணியால் நெய்யப்பட்ட பையில் பட்ஜெட் அறிக்கையை எடுத்துச் செல்வதைப்போன்று கரி மூலம் சுவரில் ஓவியமாக வரைந்துள்ளார்.

இதில், பட்ஜெட்டில் நடுத்தரக் குடும்பத்தினர் பயன்பெறும் வகையிலும், விமானம், ரயில், கட்டுமானத் துறைகள் பலன் பெறும் வகையிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.

இதில், தொழில் துறையினருக்கான சலுகைகள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கான புதிய திட்ட அறிவிப்புகளும் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்திய இறக்குமதி பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரை வரி விதித்துள்ள நிலையில், தொழில் துறையினருக்கான புதிய சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →