ஷாருக்கான் மீது தவறில்லை! - கேகேஆர் விவகாரத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மதன் லால் பேச்சு!
கேகேஆர் அணியில் வங்கதேச வீரர் சேர்க்கப்பட்டது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மதன் லால் பேச்சு...
வங்கதேச கிரிக்கெட் வீரரை கேகேஆர் அணியில் சேர்த்த விவகாரத்தில், உரிமையாளர் ஷாருக்கானின் மீது தவறில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக, வங்கதேச கிரிக்கெட் வீரர் முஷ்தஃபிசூர் ரஹ்மானை கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்திருந்தது.
இதனால், நாட்டின் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பாஜக தலைவர்கள் அணியின் உரிமையாளர் ஷாருக்கானுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, முஷ்தஃபிசூர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிப்பதாக கேகேஆர் நிர்வாகம் இன்று (ஜன. 3) அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் கேகேஆர் அணியின் உரிமையாளர் ஷாருக்கானின் மீது தவறில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மதன் லால் கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளால், இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மத்திய அரசு எடுக்க வேண்டிய முடிவு. இதில், ஷாருக்கானின் மீது தவறில்லை. அவர்கள் அணியில் வீரர்களைச் சேர்ப்பதற்காகத் தனிக்குழு ஒன்றை வைத்திருப்பார்கள்” எனப் பேசியுள்ளார்.
முன்னதாக, வங்கதேச வீரரை அணியில் சேர்த்த நடிகர் ஷாருக்கான் ஒரு தேசத் துரோகி எனப் பேசிய பாஜக நிர்வாகி சங்கீத் சிங் சோம், கேகேஆரில் இருந்து முஷ்தஃபிசூர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதை வரவேற்றுள்ளார்.
மேலும், சநாதனவாதிகளுக்கு எதிராகச் செயல்படக் கூடாது என்பதை ஷாருக்கான் இப்போது புரிந்துகொண்டிருப்பார் எனவும் அவர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Former Indian cricketer Madan Lal has stated that owner Shah Rukh Khan is not at fault in the matter of including the Bangladeshi cricketer in the KKR team.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.