திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பற்றி...
மேற்கு வங்கம் கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கட்சி இரு அணிகளாகப் பிளவுபட்டுள்ளன.
இதையடுத்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் மூலம் சந்தேகத்துக்கிடமான வகையில் சுமார் ரூ. 150 கோடிக்கு மேல் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அக்கட்சியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
கடந்த ஜூலை 2 ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், அந்தக் கட்சியின் வங்கிக் கணக்குகளில் உள்ள மொத்த நிதியை வெளியிடுமாறு தனியார் வங்கிக்கு உத்தரவிட்டது. அதன்படி, கட்சியின் வங்கிக் கணக்குகளில் ரூ. 440 கோடி பணம் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக நிறுவனமான ஐ-பேக் அலுவலகம் மற்றும் முக்கியத் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Enforcement Directorate officials are conducting raids on Tuesday (July 7) at premises belonging to the Trinamool Congress party in West Bengal.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.