வேலைவாய்ப்பு மோசடி வழக்கு: அபிஷேக் பானர்ஜி அமலாக்கத் துறையில் ஆஜர்!
அபிஷேக் பானர்ஜி அமலாக்கத்துறை முன்பு ஆஜரானது பற்றி..
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி, பள்ளி, வேலைவாய்ப்பு மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை முன்பு ஆஜரானதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பான பணமோசடி விசாரணையில் விடுக்கப்பட்ட அழைப்பாணையைத் தொடர்ந்து அபிஷேக்ந பானர்ஜி காலை 11 மணியளவில் அமலாக்கத் துறையின் சிஜிஓ வளாக அலுவலகத்தை வந்தடைந்தார்.