திரிணமூல் உள்கட்சிப் பூசல்: அபிஷேக் பானர்ஜியை சந்திக்க ஓம் பிர்லா அழைப்பு?
திரிணமூல் காங்கிரஸ் உள்கட்சிப் பூசல் தொடர்பாக அபிஷேக் பானர்ஜியை சந்திக்க மக்களவைத் தலைவர் அழைப்பு விடுத்திருப்பதாகத் தகவல்
திரிணமூல் காங்கிரஸ் உள்கட்சிப் பூசல் தொடர்பாக அபிஷேக் பானர்ஜியை சந்திக்க மக்களவைத் தலைவர் அழைப்பு விடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றநிலையில், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி மீது கட்சியிக்குள்ளேயே எதிர்ப்பும் அதிருப்தியும் கிளம்பின. இதனிடையே, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதாப்ரதா பானர்ஜியை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தேர்ந்தெடுத்தனர்.
மேலும், கட்சி எம்.பி.க்கள் 20 பேர் தனியாகப் பிரிந்து, தங்களைத் தனிக் குழுவாக அறிவிக்க வேண்டும் என்று மக்களவையில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸின் உள்கட்சிப் பூசல் விவகாரம் தொடர்பாக அபிஷேக் பானர்ஜி தரப்பினரை ஜூன் 19-ல் சந்திக்க மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.