சப்தமாக பாடல் கேட்டால்.. மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய தகவல்!
சப்தமாக பாடல் கேட்டால் அபராதம் என்று மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போது, செல்போனில் ஸ்பீக்கரில் வைத்து பாடல்களைக் கேட்டாலோ, சப்தமாக செல்போனில் பேசிக்கொண்டு வந்தாலோ ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அண்மையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறை வீடியோவில், மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போது, மக்கள் யாரும் தங்களது செல்போனில் விடியோக்களை பார்க்கும்போது ஸ்பீக்கர் போட்டு சப்தமாகக் கேட்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுளள்து.
ரயிலுக்குள்ளும், மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயணிகள் பலரும் இவ்வாறு செய்தால், ஒலி மாசு ஏற்படுவதாக, ஏராளமான பயணிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவதால் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
Important information for Metro passengers regarding listening to music at high volume!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.