ரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
ரயில் பயணிகளுக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ரயில் பயணிகளுக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்த விவரம்: நாடு முழுதும் தினமும் சுமாா் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சுமாா் 3 கோடி போ் பயணிக்கின்றனா். தற்போது வந்தே பாரத், சதாப்தி, துரந்தோ, தேஜஸ் மற்றும் ராஜ்தானி உள்ளிட்ட 1,453 ரயில்களில் பயணிகளுக்கு உணவுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
ரயில் பயணிகளுக்கு உணவுகள் சமைப்பதற்காக 800- க்கும் மேற்பட்ட சமையலறைகள் உள்ளன. உணவின் தரத்தை மேம்படுத்தும் வகையில் ரயில்வே சுற்றுலா மற்றும் உணவுக் கழகம் சமையலறைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால், 2,300 அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் சமயலறைகளில் பொருத்தப்படவுள்ளன.
Advertisement
Advertisement
சமையலறைகளில் பொருத்தப்படும் கேமராக்கள் மூலம் சமையலுக்கான காய்கறிகள் தூய்மையாக இருக்கிா என்பதையும், சமைலறைகள் சுகாதாரமானதாகப் பராமரிக்கப்படுகிா என்பதையும் கண்டறியலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
சமையலறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடா்பாக ரயில் பயனா்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும், சென்னை ரயில் பயனா்கள் குழு உறுப்பினா் ஜாபா் அலி தெரிவித்தாா்.