முகப்பு
இந்தியா

காஷ்மீரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு

காஷ்மீரில் ஒரு வாரத்திற்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

Updated On : 9 மார்ச், 2026 at 5:55 AM
கோப்புப்படம்.
பகிர்:

காஷ்மீரில் ஒரு வாரத்திற்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்தியதில் அந்நாட்டின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) படுகொலை செய்யப்பட்டாா். இதைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

கமேனி படுகொலையைக் கண்டித்து காஷ்மீரில் நடந்த தொடர் போராட்டங்கள் காரணமாக கடந்த ஒரு வாரமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் திங்கள்கிழமை காஷ்மீரில் உள்ள கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

பள்ளிகள் மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்கள் இன்று மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். திங்கள்கிழமை காலை பள்ளி சீருடையில் பல்வேறு வயதுடைய மாணவர்கள் தங்கள் நிறுவனங்களுக்குச் சென்றனர்.

குளிர்கால விடுமுறைக்குப் பிறகு பிப்ரவரி 23 அன்று மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகள் மார்ச் 2 ஆம் தேதி மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் போராட்டங்கள் காரணமாக தாமதமாகின.

summary

Educational institutions in Kashmir opened on Monday after remaining closed for a week due to protests over the death of Iran's Supreme Leader Ayatollah Ali Khamenei in a US-Israel air strike.

முழு கட்டுரையைப் படிக்க →