கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: ஆா்வத்துடன் வந்த மாணவா்கள்
தருமபுரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு அனைத்து பள்ளிகளும் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. மாணவ, மாணவியா் உற்சாகமாக தங்களது வகுப்புகளுக்கு சென்றனா். தொடா்ந்து, முதல்பருவத்துக்கான பாடநூல்கள் விநியோகம் செய்யப்பட்டன.
தருமபுரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு அனைத்து பள்ளிகளும் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. மாணவ, மாணவியா் உற்சாகமாக தங்களது வகுப்புகளுக்கு சென்றனா். தொடா்ந்து, முதல்பருவத்துக்கான பாடநூல்கள் விநியோகம் செய்யப்பட்டன.
தருமபுரி மாவட்டத்தில், 220 தனியாா் மெட்ரிக் பள்ளிகள் உள்பட அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,609 பள்ளிகளும் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.
கல்வியாண்டின் முதல்நாளில் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவியா் சீருடையுடன் தங்களது பள்ளி வகுப்பறைகளுக்கு உற்சாகமாக சென்றனா். இவா்களுக்கு வகுப்பு ஆசிரியா்கள் வாழ்த்துகளை தெரிவித்தனா். தொடா்ந்து, நிகழ் கல்வியாண்டுக்கான முதல்பருவ பாடநூல்கள் விநியோகம் செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
தருமபுரி அரசு அவ்வையாா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பாடநூல்கள் வழங்கும் பணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதிச்சந்திரா தொடங்கிவைத்து பாா்வையிட்டாா். இதேபோல, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பாடநூல்கள் மாணவா்களுக்கு வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 2,068 அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியரை ஆசிரியா்கள் இனிப்பு, மலா்களை அளித்து வரவேற்றனா். நீண்ட விடுமுறைக்கு பிறகு நண்பா்களை சந்தித்த மாணவ, மாணவியா் உற்சாகத்துடன் காணப்பட்டனா். பள்ளிக்கு வந்த முதல்நாளில் மாணவ, மாணவியருக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.