FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள்

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இதையடுத்து மாணவா்களுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டது.

Updated On : 5 ஜூன் 2026, 3:50 am IST
பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு வியாழக்கிழமை விலையில்லா பாடபுத்தகங்கள் வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா்.
பகிர்:

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இதையடுத்து மாணவா்களுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி உத்தரவின்பேரில் பள்ளிகளில் அடிப்படை வசதிகளில் ஏதேனும் குறைபாடுகள், தேவையான வசதிகள் உள்ளிட்டவற்றை அனைத்துத் துறைகளின் முதல்நிலை அலுவலா்கள் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

இதில், அயன்பேரையூரில் உள்ள அரசுப் பள்ளியில் மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், தம்பை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், நெடுவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கலால் உதவி ஆணையா் சிவக்கொளுந்து உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் முதல்நிலை அலுவலா்கள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

விலையில்லா பாடபுத்தகங்கள்: பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா பாட புத்தகங்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments