முகப்பு
இந்தியா

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் மகளுக்கு அரசுப் பணி!

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் மகளுக்கு மகாராஷ்டிர அரசு, அரசுப் பணி வழங்கியது குறித்து...

Updated On : 19 மார்ச், 2026 at 6:35 AM
பஹல்காம் தாக்குதல்
பகிர்:

நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு, மகாராஷ்டிர அரசு பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் மகளுக்கு அரசுப் பணியை வழங்கியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் 2025, ஏப்ரல் 22 ஆம் தேதியன்று பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றதில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலியான 26 பேரில் சந்தோஷ் ஜக்தாலே உள்பட மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசுப் பணி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் உறுதியளித்திருந்தனர்.

முன்னதாக, அரசுப் பணி தருவதாக உறுதியளித்து பல மாதங்கள் கடந்தும் உரிய ஆணை வழங்கப்படவில்லை என சந்தோஷ் ஜக்தாலேவின் மகள் அசாவரி ஜக்தலே கூறியிருந்தார்.

இந்த நிலையில், புணே மாநகராட்சியில் நிர்வாக அதிகாரியாக அசாவரி ஜக்தாலேவை நியமித்து, புணே மேயர் புதன்கிழமை (மார்ச் 18) அவருக்கு நியமனக் கடிதத்தை வழங்கினார்.

மேலும், அசாரி முதுகலைப் பட்டம் முடித்த பட்டாதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

summary

After a long wait, the Maharashtra government has offered a government job to the daughter of a victim of the Pahalgam attack.

முழு கட்டுரையைப் படிக்க →