ஆந்திரம்: குரங்குகள் கூட்டமாக தாக்கியதில் மூதாட்டி பலி!
ஆந்திரத்தில் குரங்குகள் கூட்டமாக தாக்கியதில் மூதாட்டி ஒருவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரத்தில் குரங்குகள் கூட்டமாக தாக்கியதில் மூதாட்டி ஒருவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டத்தில் தனது விவசாய நிலத்திற்குச் சென்றுவிட்டு 65 வயது மூதாட்டி சனிக்கிழமை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது குரங்குகள் கூட்டமாக அவரைத் தாக்கியது.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் பலியானார். தப்பிக்கும் முயற்சியில் அவர் வழுக்கி விழுந்ததைத் தொடர்ந்து, அந்தக் குரங்குகள் அவரைத் தாக்கியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
போலீஸார் கூறுகையில், விவசாயிகள் நீண்ட காலமாக குரங்குகளின் தொல்லையால் பிரசனைகளைச் சந்தித்து வருகின்றனர். மேலும் அவர்கள் தொடர்ந்து அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு குறிப்பிட்டனர்.
பலியான மூதாட்டி 3 ஏக்கர் விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள வீட்டில் தனது மகளின் குடும்பத்துடன் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.