முகப்பு
இந்தியா

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின்!

மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக தேசிய தலைவரான நிதின் நபின் தனது பிகார் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.

Updated On : 30 மார்ச் 2026, 1:06 pm IST
நிதின் நபின்
பகிர்:

மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக தேசிய தலைவரான நிதின் நபின் தனது பிகார் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.

பிகார் மாநிலம், பாங்கிபூர் தொகுதிக்கான அவரது ராஜிநாமா கடிதத்தை, மாநில பாஜக தலைவர் சஞ்சய் சரோகி, பேரவைத் தலைவர் பிரேம் குமாரிடம் சமர்ப்பித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேம் குமார், "நிதின் நபினின் ராஜிநாமா கடிதத்தை சஞ்சய் என்னிடம் சமர்ப்பித்தார்.

அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதனை அனுப்பி வைத்துள்ளேன்," என்று தெரிவித்தார். அதேபோல், பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது மாநில சட்ட மேலவை உறுப்பினர் பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.

Advertisement

Advertisement

நிதின் நபின் மற்றும் நிதீஷ் குமார் ஆகிய இருவரும் கடந்த மார்ச் 16ஆம் தேதி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னதாக இதுகுறித்து நிதின் நபின் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், "இன்று, பாங்கிபூர் தொகுதியில் இருந்து பிகார் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் பதவியை நான் ராஜிநாமா செய்கிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.

கட்சி தனக்கு அளித்துள்ள புதிய பொறுப்பில் பாங்கிபூர் தொகுதி மற்றும் பிகாரின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் நபின் தெரிவித்துள்ளார்.

summary

BJP national president Nitin Nabin resigned as a member of the Bihar Assembly on Monday, two weeks after he was elected to the Rajya Sabha.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.