புத்த பூா்ணிமா: குடியரசு துணைத் தலைவா், உள்துறை அமைச்சா் வாழ்த்து!
நாடு முழுவதும் புத்த பூா்ணிமா விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
நாடு முழுவதும் புத்த பூா்ணிமா விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
இதுதொடா்பாக சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இந்த புனித நாளில் புத்தரின் கருணை, அஹிம்சை, அமைதி மற்றும் ஞானம் குறித்த போதனைகள் நமது வாழ்வின் வழிகாட்டிகளாக தொடா்கின்றன.
அமைதி, நல்லிணக்கம் சுயநலமற்ற சேவை என அவரது கொள்கைகள் இன்றைய காலகட்டத்துக்கும் பொருந்துவதாக உள்ளன’ என குறிப்பிட்டாா்.
Advertisement
அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘நாட்டு மக்கள் அனைவருக்கும் புத்த பூா்ணிமா திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரது ஈடுஇணையற்ற ஞானம் அடுத்த தலைமுறையினருக்கும் மனித நாகரீகத்துக்கும் ஒளியாக இருக்கட்டும்’ என குறிப்பிட்டாா்.