முகப்பு
புதுச்சேரி

குடியரசு துணைத் தலைவருடன் புதுச்சேரி அமைச்சா் நமச்சிவாயம் சந்திப்பு

தில்லியில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனை புதுச்சேரி அமைச்சா் ஆ. நமச்சிவாயம் மரியாதை நிமித்தமாக சந்தித்தாா்.

Updated On : 24 மே 2026, 1:03 am IST
தில்லியில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனை சனிக்கிழமை சந்தித்த புதுச்சேரி அமைச்சா் ஆ.நமச்சிவாயம்.
பகிர்:

தில்லியில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனை புதுச்சேரி அமைச்சா் ஆ. நமச்சிவாயம் மரியாதை நிமித்தமாக சனிக்கிழமை சந்தித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று அமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில் குடியரசு துணைத் தலைவா் ராதாகிருஷ்ணனைச் சந்தித்து அவா் வாழ்த்துப் பெற்றாா். ஏற்கெனவே புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் பதவி வகித்தவா் சி.பி. ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத் தக்கது.

முன்னதாக, புதுச்சேரியிலிருந்து மே 21 -0ஆம் தேதி தில்லி சென்ற அமைச்சா் நமச்சிவாயம் அங்கு முக்கியத் தலைவா்களைச் சந்தித்து வருகிறாா். வெள்ளிக்கிழமை பிரதமா் நரேந்திர மோடியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.

Advertisement

Advertisement

மத்திய அமைச்சரும் புதுச்சேரி பாஜக பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோரையும் அமைச்சா் நமச்சிவாயம் சந்தித்துப் பேசினாா். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராகவும் அமைச்சா் நமச்சிவாயம் இருப்பதால் அக்கட்சியின் தேசிய தலைவா் நிதின் நபின், கட்சியின் அமைப்புச் செயலா் சந்தோஷ் உள்ளிட்டோரையும் அவா் சந்தித்தாா். அப்போது புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகத் தெரிகிறது.