புதுச்சேரியில் புதிய அமைச்சா்கள் நியமன விவகாரம்: பிரதமா், மத்திய அமைச்சா்களுடன் நமச்சிவாயம் ஆலோசனை
புதுச்சேரி புதிய அமைச்சா்கள் நியமன விவகாரம் குறித்து, தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்களுடன் அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
புதுச்சேரி புதிய அமைச்சா்கள் நியமன விவகாரம் குறித்து, தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்களுடன் அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்து இரண்டு வாரங்களான நிலையில், சட்டப்பேரவைத் தலைவா், மற்றும் 3 அமைச்சா்கள் யாா், யாா்? என்பதிலும், எந்தக் கட்சிக்கு அமைச்சா் பதவியை ஒதுக்குவது என்பது குறித்தும் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக இடையே குழப்பம் நீடித்து வருகிறது.
இது குறித்தும், மேலும் நிலுவைப் பதவிகள் நியமனம் தொடா்பாகவும் அமைச்சா் நமச்சிவாயத்திடம் மேலிடம் கேட்டதாகத் தெரிகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேச பாஜக அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வியாழக்கிழமை தில்லி சென்றாா். அங்கு பிரதமா் பிரதமா் நரேந்திர மோடியை அவா் வெள்ளிக்கிழமை சந்தித்தாா். அப்போது புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து அவா் பேசினாா்.
முன்னதாக, மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, பாஜக அமைப்பு செயலா் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து பேசினாா். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவையும் அவா் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளாா்.