முகப்பு
இந்தியா

முறைகேடு புகார்: வாக்குப்பெட்டி அறையில் 4 மணி நேரம் இருந்த மமதா பானர்ஜி!

பவானிபூர் தொகுதியில் உள்ள வாக்குப்பெட்டிகள் உள்ள அறையில் மமதா பானர்ஜி 4 மணி நேரம் இருந்தது பற்றி....

மமதா பானர்ஜி - கோப்புப்படம்
பகிர்:

வாக்கு எந்திரங்களில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்ததையடுத்து வாக்குப்பெட்டிகள் உள்ள பாதுகாப்பு அறைக்கு முதல்வர் மமதா பானர்ஜி நேரடியாகச் சென்றார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் 294 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தோ்தல் நடந்து முடிந்த நிலையில் மற்ற 4 மாநிலங்களுடன் சேர்த்து வருகிற மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் மேற்குவங்கத்தில் திரிணமூல் மற்றும் பாஜக இடையே கடும்போட்டி நிலவும் என தெரிகிறது. பாஜக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகவும் ஒருசில கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

Advertisement

இந்நிலையில் தான் போட்டியிடும் பவானிபூர் தொகுதியின் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்திற்குச் சென்ற முதல்வர் மமதா பானர்ஜி அங்கு சுமார் 4 மணி நேரம் காத்திருந்தார். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்யவுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவ்வாறு யாரேனும் முறைகேடு செய்ய முயன்றால் கடுமையான போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.