அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு
அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வரும் துணை முதல்வர் பவன் கல்யாணை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வரும் துணை முதல்வர் பவன் கல்யாணை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஹைதராபாத்தில் உள்ள பவன் கல்யாணின் இல்லத்திற்கு சனிக்கிழமை சென்ற முதல்வர், உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பவன் கல்யாணை சந்தித்து அவருக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆறுதல் கூறினார்.
அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு கல்யாண் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்", என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது, ஜனசேனை கட்சி நிறுவனரான பவன் கல்யாணிடம், போதிய அளவு ஓய்வெடுக்குமாறும் முதல்வர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
முன்னதாக, ஏப்ரல் 18ஆம் தேதி ஜனசேனை கட்சி வெளியிட்ட அறிக்கையில், பவன் கல்யாணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அவர் குணமடைய கால அவகாசம் தேவைப்படுவதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.