பிரதமரைத் தொடர்ந்து..! ஆந்திர முதல்வரின் பாதுகாப்பு அணிவகுப்பில் 50% வாகனங்கள் குறைப்பு!
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது குறித்து...
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களின் எண்ணிக்கையை 50 சதவிகிதம் குறைத்துள்ளார்.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடால், வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டுமெனவும், பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமெனவும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள முதல்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களின் எண்ணிக்கையை 50 சதவிகிதம் குறைக்குமாறு அதிகாரிகளுக்கு புதன்கிழமை (மே 13) அன்று உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 12-ல் இருந்து வெறும் 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வீட்டிலிருந்து சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க தலைமைச் செயலகத்துக்குச் சென்ற முதல்வர் சந்திரபாபு உடன் வெறும் 4 வாகனங்கள் மட்டுமே சென்றதாகக் கூறப்படுகிறது.
இதேபோல், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் தனது பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Andhra Pradesh CM Chandrababu Naidu has reduced the number of vehicles in his security convoy by 50 percent.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.