ஆந்திர மதுபான ஊழல் வழக்கு: முன்னாள் ஒய்எஸ்ஆர் அமைச்சர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!
ஆந்திர மதுபானக் கடத்தல் முறைகேடு வழக்குத் தொடர்பாக அமலாக்கத் துறை சோதனை நடத்தியது பற்றி..
ஆந்திர மதுபானக் கடத்தல் முறைகேடு வழக்குத் தொடர்பாக முன்னாள் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் அமைச்சர் கருமுரி நாகேஸ்வர ராவ் உள்ளிட்டோரின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்குத் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்களுக்குச் சொந்தமான மொத்தம் ஐந்து இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டது. இதில் முன்னாள் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் கே. நாகேஸ்வர ராவ் மற்றும் அவரது மகனின் இடங்களும் அடங்கும்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விசாரணை ஆந்திரப் பிரதேச மாநில மதுபானங்கள் கழகம் தொடர்பானதாகும்.
Advertisement
Advertisement
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசுக்கு ரூ. 195.33 கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோதனையின்போது ரூ. 8 லட்சம் ரொக்கம், இரண்டு ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள், சில வாகனங்கள், "குற்றத்தை நிரூபிக்கும் வகையிலான" ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இந்தப் பொருள்கள் அனைத்தும் யாருடைய இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்டன என்பது குறித்த விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை.