பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!
தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டு வருவது தொடர்பாக...
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக, தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் 18 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அரசுப் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டித் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக, தேர்வு எழுதியவர்கள் புகார் செய்தனர்.
Advertisement
Advertisement
புகாரின் அடிப்படையில், 199 பேர் போட்டித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மாற்றப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போட்டித் தேர்வின் விடைத்தாள்களை திருத்திய தனியார் நிறுவனத்திடம் போலீஸார் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் முறைகேடு தொடர்பாக, கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
The Enforcement Directorate is conducting raids at 18 locations across Tamil Nadu in connection with the polytechnic lecturer recruitment scam.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.