விஜய் மீது பொறாமையாக இருக்கிறது: பவன் கல்யாண்
ஆந்திரத் துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியவை.
விஜய் வெற்றிபெற்றது பொறாமையாக இருப்பதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட முதல் முறையிலேயே விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய்க்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
விஜய் பதவியேற்ற அன்று ஆந்திர துணை முதல்வரான பவன் கல்யாண் விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஆந்திரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விஜய் பற்றியும் தமிழக அரசியல் சூழல் பற்றியும் பவன் கல்யாண் பேசிய விடியோ வைரலாகியுள்ளது.
அதில், “தமிழ்நாட்டு அரசியலில் மிகவும் எளிதாக வெற்றி பெறுகிறார்கள். அதைப் பார்த்தால் எனக்கே பொறாமையாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கட் அவுட்கள் மற்றும் ஹாலோகிராம் உருவங்களை வைத்தே விஜய் முதல்வராகிவிட்டார்.
நான் 15 ஆண்டுகளாக அரசியலில் பயணம் செய்தும் இந்தளவு பெரிய வெற்றியை பார்த்ததில்லை” என்று தெரிவித்துள்ளார்