பவன் கல்யாணை நேரில் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி!
அறுவை சிகிச்சை செய்திருந்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று நலம் விசாரித்தார்.
அறுவை சிகிச்சை செய்திருந்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று நலம் விசாரித்தார்.
உடல்நலக் குறைவு காரணமாக ஆந்திர துணை முதல்வரும் ஜன சேனை தலைவருமான பவன் கல்யாணுக்கு கடந்த மாதம் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
பவன் கல்யாண் தொடர்ந்து அரசியல் கூட்டங்களில் பங்கேற்று வந்த நிலையில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவர்களின் ஆலோசனையின் கீழ் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Advertisement
Advertisement
முழுமையாகக் குணமடைய அதிக காலம் எடுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்த நிலையில் அறுவைச் சிகிச்சை முடிந்து அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்துள்ள பவன் கல்யாண் வீட்டில் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.
இவரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த வாரம் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று பவன் கல்யாண் வீட்டிற்கு நேரில் சென்று அவரை நலம் விசாரித்தார்.இதுபற்றி அவர் வெளியிட்ட பதிவில், “ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இல்லத்திற்குச் சென்று, அவரையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்தேன். பவன் கல்யாணை நலம் விசாரித்து, அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்தினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Prime Minister Modi personally visited Pawan Kalyan to inquire about his well-being
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.