முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ராஜிநாமா!
முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் ஹிமந்த பிஸ்வ சர்மா..
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தனது அமைச்சரவை அமைச்சர்களுடன் இணைந்து தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
126 உறுப்பினர்களைக் கொண்ட அம்மாநில சட்டப்பேரவையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 102 இடங்களைக் கைபற்றியது. பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றன. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற்றது.
இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
Advertisement
Advertisement
அஸ்ஸாம் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியானதைத் தொடர்ந்தும், புதிய அரசு அமைவதற்கு வழிவகை செய்யும் வகையிலும், ஹிமந்த பிஸ்வ சர்மா இன்று ஆளுநர் மாளிகையில் அமைச்சரவை உறுப்பினர்களுடன் இணைந்து தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் லஷ்மணாச்சார்யாவிடம் சமர்ப்பித்தார்.
முதல்வரின் ராஜிநாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகவும், புதிய அரசு பொறுப்பேற்றும் வரை இடைக்கால முதல்வராகத் தொடர்ந்து பணியாற்றுமாறு சர்மாவிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சர்மா,
புதிய அரசு பதவியேற்பு விழா மே 11-க்குப் பிறகு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.
இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்பதால், இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
மத்திய பார்வையாளர்களின் முன்னிலையில் நடைபெறும் பாஜக சட்டப்பேரவைக் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில், அஸ்ஸாமின் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சர்மா தெரிவித்தார்.
Assam Chief Minister Himanta Biswa Sarma on Wednesday resigned along with his cabinet colleagues, paving the way for formation of a new government led by the BJP, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.