அஸ்ஸாம் முதல்வராக மே 12ல் பதவியேற்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா!
அஸ்ஸாமின் முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா மே 12ஆம் தேதி மீண்டும் பதவியேற்க உள்ளார்.
அஸ்ஸாமின் முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா மே 12ஆம் தேதி மீண்டும் பதவியேற்க உள்ளார்.
126 தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாமில் பாஜக தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பாஜக 82 இடங்களையும், அதன் கூட்டணி கட்சிகள் 20 இடங்களையும் கைப்பற்றின. வெறும் 19 இடங்களுடன் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது.
இந்த நிலையில் குவாஹாட்டியில் வெற்றி பெற்ற பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஹிமந்த பிஸ்வ சர்மா ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து பாஜக தலைமையிலான தேஜ கூட்டணியின் தலைவராகவும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Advertisement
Advertisement
இதைத்தொடர்ந்து மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக ஹிமந்த பிஸ்வ பொறுப்பேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார். அதேசமயம் முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா மே 12ஆம் தேதி மீண்டும் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேஜ கூட்டணி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே உரையாற்றிய ஹிமந்த பிஸ்வா சர்மா, கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் மக்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். மேலும், ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாகவும் அவர் கூறினார்.
Himanta Biswa Sarma was elected as the leader of the BJP-led NDA in the Assam assembly on Sunday, paving the way for him to become the chief minister for the second consecutive term in the state, Union minister J P Nadda said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.