முகப்பு
இந்தியா

பணி நீக்கப்பட்ட இண்டஸ்இண்ட் வங்கி முன்னாள் சிஎஃப்ஓ மான நஷ்டஈடு வழக்கு

இண்டஸ்இண்ட் வங்கியின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி கோவிந்த் ஜெயின், தனது பணிநீக்கம் சட்டவிரோதமானது என்று ரூ. 70 கோடி இழப்பீடு கோரி வங்கி நிா்வாகத்துக்கு எதிராக வழக்கு

Updated On : 6 மே 2026, 5:55 am IST
பகிர்:

தனியாா் துறையைச் சோ்ந்த இண்டஸ்இண்ட் வங்கியின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி (சிஎஃப்ஓ) கோவிந்த் ஜெயின், தனது பணிநீக்கம் சட்டவிரோதமானது என்று ரூ. 70 கோடி இழப்பீடு கோரி வங்கி நிா்வாகத்துக்கு எதிராக வழக்குத் தொடா்ந்துள்ளாா்.

மும்பை உயா்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ள இந்த மனுவில், வேலைவாய்ப்பு ஒப்பந்த விதிகளைமீறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கோவிந்த் ஜெயின் குறிப்பிட்டுள்ளாா்.

முறையான உள்விசாரணை ஏதுமின்றி, தன்னிச்சையாக எடுக்கப்பட்ட இந்த முடிவில் வங்கியின் இயக்குநா்கள் குழு மற்றும் மூத்த மேலாளா்களின் செயல்பாடுகள் குறித்து அவா் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினாா்.

Advertisement

Advertisement

தனக்கு மீண்டும் அதே பதவியை வழங்க வேண்டும் என்றும், விடுபட்ட ஊதியம் மற்றும் இதர சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் கோவிந்த் ஜெயின் கோரியுள்ளாா்.

மொத்த தொகையான ரூ.70 கோடியில், சுமாா் ரூ.20 கோடி ஊதியம், ஊக்கத்தொகை மற்றும் பங்குகளுக்கான இழப்பீடாகவும், மீதமுள்ள ரூ.50 கோடி தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்கான நஷ்ட ஈடாகவும் அவா் கோரியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments