பிகாரில் நாளை புதிய பாஜக அமைச்சரவை பதவியேற்பு! ராஜ்நாத் சிங் பங்கேற்பு!
மே 7 ஆம் தேதி பிகாரில் பாஜக அமைச்சரவை பதவியேற்பு...
பிகார் முதல்வர் சாம்ராட் சௌதரி தலைமையிலான புதிய பாஜக அமைச்சரவை வரும் மே 7 ஆம் தேதி பதவியேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகாரில், கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வான நிதீஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதனால், முதல்முறையாக பாஜகவின் சாம்ராட் சௌதரி கடந்த ஏப். 14 ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், புதன்கிழமை (ஏப். 6) மாலை 5 மணியளவில் பிகார் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதாகவும்; பின்னர், மாலை 6 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் புதிய அமைச்சரவை குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், நாளை நடைபெறும் பிகாரின் புதிய பாஜக அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
BJP cabinet, led by Bihar CM Samrat Choudhary, will be sworn in on May 7th.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.