மேற்கு வங்கத்தின் புதிய அமைச்சரவைக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
மேற்கு வங்கத்தின் புதிய அமைச்சரவைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தது குறித்து...
மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் சுவேந்து அதிகாரிக்கும் அவர் தலைமையிலான அமைச்சரவைக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவையில் 207 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான பெரும்பான்மையைப் பெற்றது. இதன் மூலமாக, திரிணமூல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டுவந்தது.
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் பவானிபூர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டு சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். மேலும், அவர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான நந்திகிராமிலும் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (மே 8) நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டு, அவரே முதல்வராகவும் பொறுப்பேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நிகழ்ந்த பதவியேற்பு விழாவில் சுவேந்து அதிகாரி முதல்வராகவும் மற்றும் அவருடைய தலைமையிலான அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி போன்ற முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதனிடையே, பதவியேற்பு விழா முடிந்த பிறகு, அந்த மேடையிலேயே மேற்கு வங்கத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், பாஜக சார்பில் மேற்கு வங்கத்தில் பதவியேற்கும் முதல் முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
Prime Minister Modi extended his congratulations to West Bengal's new Chief Minister, Suvendu Adhikari, and the cabinet led by him.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.