தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15% ஆக உயர்வு!
தங்கம், வெள்ளி பொருள்கள் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது பற்றி...
தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருள்கள் மீதான சுங்க வரி 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் இடையேயான போரால் உலக பொருளாதார வளர்ச்சியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
அதேபோல தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருள்கள் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதனால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது.
Advertisement
இதனால் ஓராண்டுக்கு மக்கள் யாரும் தங்கம் வாங்க வேண்டாம் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார்.
இதையடுத்து தங்கம், வெள்ளி பொருள்களின் இறக்குமதியைக் குறைக்கும்பொருட்டு அந்த பொருள்கள் மீதான சுங்க வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளி பொருள்களின் மீது சுங்கவரி 5 லிருந்து 10 சதவீதமாகவும் செஸ் வரி 1 லிருந்து 5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.