குஜராத்: பண மழையில் நனைந்த பாடகர்!
குஜராத்தில் இசை நிகழ்ச்சியின்போது பிரபல பாடகர் மீது மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகளை கொட்டி அவரையே மூழ்கடித்தனர்.
குஜராத்தில் இசை நிகழ்ச்சியின்போது பிரபல பாடகர் மீது மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகளை கொட்டி அவரையே மூழ்கடித்தனர்.
குஜராத் மாநிலம், ஜுனாகத் அருகே உள்ள கம்பாலியா கிராமத்தில் நடைபெற்ற பாரம்பரிய டாய்ரோ நிகழ்ச்சியில் பிரபல பஜனை பாடகர் கோபால் சாது பாடிக்கொண்டிருந்தார். அப்போது அவர் மீது ரூபாய் நோட்டுகளை மூட்டை மூட்டையாக கொட்டி அவரையே பக்தர்கள் மூழ்கடித்தனர். தற்போது இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த விடியோவில், பாடகர் சாது மேடையில் அமர்ந்து ஹார்மோனியம் வாசிப்பதைக் காண முடிகிறது. அதே நேரத்தில், மக்கள் தொடர்ந்து கட்டுக்கட்டாகவும், மூட்டை மூட்டையாகவும் பணத்தை அவருக்கு முன்னால் குவித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒருகட்டத்தில் பாடகர் வெளியவே தெரியாத அளவுக்கு ரூபாய் நோட்டுகளால் மூழ்கடிக்கப்படுகிறார்.
Advertisement
Advertisement
இருப்பினும், பாடகர் எதற்கும் அசராமல் தனது பாடலைத் தொடர்ந்தார். 'டாய்ரோ' என்பது குஜராத்தின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியாகும். இதில் இசை, கதை சொல்லுதல், பக்திப் பாடல்கள் மற்றும் நகைச்சுவை ஆகியவை கலந்திருக்கும். குஜராத்தின் கிராமப்புறங்களில் இந்த நிகழ்ச்சிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
A viral video from Gujarat has left social media both amused and stunned after folk singer Gopal Sadhu was nearly buried under piles of cash while performing at a traditional Dayro event.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.