யார் இந்த பத்மா ஜெய்ஸ்வால்? ஐஏஎஸ் பணியிலிருந்து நீக்கப்பட காரணம்?
ஊழல் புகாரில் பத்மா ஜெய்ஸ்வால் ஐஏஎஸ் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2003ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பத்மா ஜெய்ஸ்வால், ஐஏஎஸ் பதவியிலிருந்து நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பத்மா ஜெய்ஸ்வாலை ஐஏஎஸ் பதவியிலிருந்து நீக்குவதற்கான பரிந்துரையில், குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, அவரது பணி நீக்க உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பத்மா ஜெய்ஸ்வால் பதவிநீக்கத்துக்கான பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டிருந்தது.
Advertisement
ஊழல் குற்றச்சாட்டின் கீழ் 2008ஆம் ஆண்டு அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்து பிறகு மீண்டும் பணியில் இணைந்தவர். மத்திய புலனாய்வு ஆணையம் மற்றும் மத்திய பணியாளர் தேர்வாணையம் இணைந்து நடத்திய விசாரணையில், பத்மா ஜெய்ஸ்வாலை பணியிலிருந்து நீக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
கடந்த 2007 - 08ஆம் ஆண்டு அருணாச்சலப்பிரதேசத்தின் மேற்கு காமெங்க மாவட்ட துணை ஆணையராக பத்மா ஜெய்ஸ்வால் இருந்தபோது அங்கு முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். பிறகு பதவில் அமர்த்தப்பட்டார். சமார் 20 ஆண்டுகள் அருணாசலப்பிரதேசத்திலும், தில்லி, கோவா, புதுவையிலும் அவர் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
தற்போது, 2008ஆம் ஆண்டு அருணாசலில் பதிவான ஊழல் புகாரின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.