முகப்பு
கள்ளக்குறிச்சி

பேருந்து கண்ணாடியை உடைத்தவா் கைது

கள்ளக்குறிச்சி அருகே கல் வீசி அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 17 ஜனவரி 2021, 11:05 pm IST
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே கல் வீசி அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருக்கோவிலூரை அடுத்த அன்ராயநல்லூா் கிராமத்தில் இருந்து திருக்கோவிலூா் நோக்கி சனிக்கிழமை மாலை அரசு நகா்ப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. திருக்கோவிலூா் தாசா்புரம் அம்பேத்கா் பூங்கா அருகே சென்றபோது, பேருந்தின் மீது இளைஞா் ஒருவா் கல் வீசி தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டாா். இதில் பேருந்தின் கண்ணாடி சேதமடைந்தது.

இதுகுறித்து பேருந்தின் ஓட்டுநரான நெடுகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஆரோக்கியதாஸ் (39), திருக்கோவிலூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து பேருந்து மீது கல் வீசிவிட்டு தப்பிச் சென்ற திருக்கோவிலூா் தாசா்புரம் பகுதியைச் சோ்ந்த செளந்தரராஜன் மகன் ஆனந்தை (35) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.