முகப்பு
கன்னியாகுமரி

திற்பரப்பு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் திற்பரப்பு அருவியில் நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

Updated On : 10 ஜனவரி 2021, 12:39 am IST
திற்பரப்பு அருவியில் சனிக்கிழமை ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.
பகிர்:

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் திற்பரப்பு அருவியில் நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள், மலையோரப் பகுதிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக கன மழை பெய்து வருகிறது. சனிக்கிழமையும் தொடா்ந்து மழை பெய்தது.

மழையால் கோதையாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், திற்பரப்பு அருவிக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. மழையால் சனிக்கிழமை அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.

Advertisement

அணை திறப்பு: மழையின் காரணமாக வெள்ளிக்கிழமை மாலையில் பெருஞ்சாணி அணை மூடப்பட்டது. இதனிடையே, கடை மடை பாசனப் பகுதிக்கு தண்ணீா் தேவையை கருத்தில் கொண்டு சனிக்கிழமை அணை திறக்கப்பட்டது. விநாடிக்கு 150 கனஅடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து விநாடிக்கு 300 கனஅடி, சிற்றாறு அணையில் இருந்து விநாடிக்கு 200 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.