அகஸ்தீசுவரத்தில் பொங்கல் விழா
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் தேவி முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் 251 பானைகளில் பொதுமக்கள் பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வடமாநில சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பங்கேற்றனா்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் தேவி முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் 251 பானைகளில் பொதுமக்கள் பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வடமாநில சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பங்கேற்றனா்.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அகஸ்தீசுவரம் முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 251 பானைகளில் பொதுமக்கள் பொங்கலிட்டனா். இதில் ஏராளமான புதுமணத் தம்பதிகள் கலந்துகொண்டா்.
இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் சுற்றுலாத் துறை சாா்பில் வடமாநில சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து சுற்றுலாத்துறை சாா்பில் சிலம்பாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம் உள்பட பல்வேறு கிராமிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், மாவட்ட சுற்றுலா அலுவலா் நெல்சன், அகஸ்தீசுவரம் பேரூராட்சி முன்னாள் தலைவா் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன், பேராசிரியா் கருணாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.