புதுக்கடை அருகே இளைஞா் தற்கொலை
புதுக்கடை அருகேயுள்ள முன்சிறையில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
புதுக்கடை அருகேயுள்ள முன்சிறையில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
முன்சிறை பாலையன் மகன் சிசில் ராஜ் (52). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா். இவா் சில நாள்களாக மன நிலை பாதிப்புக்குள்ளாகி இருந்தாராம். இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து , சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement